கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

by Editor / 30-10-2022 12:41:48am
கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்பு பள்ளம் பகுதியில் குட்டையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

குடும்பத்துடன் சென்னை வடபழனியில் வசித்து வருபவர் ஏழுமலை இவர் தனது குடும்பத்துடனும், வீட்டிற்கு அருகில் வசிப்பவர் வடபழனி மஜித் நகர்  முனிசாமி  குடும்பத்தினரும் ஆகியோரும் வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்பு பள்ளத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். முனிசாமி மகன் ராகுல்,ஏழுமலை மகன் தனுஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் ஏவியேஷன் கல்லூரியில் ஒன்றாக பயின்றுவருகின்றனர்.இவர்களும் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர்.சுண்ணாம்பு பள்ளம் பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் இருவரம் ஆழமான பகுதியில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியாயினர்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
 

Tags :

Share via