இன்ஸ்டாகிராமில் பழகி 52 வயது ஆண் ஏமாற்றிய 29 வயது பெண்

by Staff / 31-10-2022 01:53:21pm
இன்ஸ்டாகிராமில் பழகி 52 வயது ஆண் ஏமாற்றிய  29 வயது பெண்

நெல்லைச் சேர்ந்த ஆல்பர்ட்(52) என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், மதுரையைச் சேர்ந்த சவுண்ட் சத்யா(29) என்பவருடன் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், தனிமையில் சந்தித்து பழக இருவரும் கன்னியாகுமரிக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நள்ளிரவில் திடீரென விழித்து கொண்ட ஆல்பர்ட் தன்னுடன் வந்த சவுண்ட் சத்யா காணாமல் போனதையும், தன்னுடைய 9 சவரன் நகைகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பெண்ணின் செல்போனுக்கு உடனடியாக தொடர்பு கொண்ட போது சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via