மனைவிக்கு வீட்டில் சிலை வைத்த கணவர்..

by Editor / 31-10-2022 11:41:00pm
மனைவிக்கு வீட்டில் சிலை வைத்த கணவர்..

சேலம் மாவட்டம் ஊட்டுக்கிணறு கிழாக்காடு பகுதியைச் சேர்ந்த எர்சன் – நிலா தம்பதிக்கு 24 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர். இதில்,ஒரு பெண்ணுக்கு திருமணமான நிலையில் 2 பேர் கல்லூரியில் படித்துவருகின்றனர். ஓராண்டிற்கு முன்பு  எர்சன் மனைவி நிலா பாம்பு கடித்து உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக தான் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டின் வரவேற்பறையில் அவர் தனது மனைவியின் உருவச்சிலையை வைத்து  பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
 

 

Tags :

Share via