முடிந்தால் நேரடியாக வந்து கைது செய்யலாமே முதலமைச்சர் சவால்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்க இயக்குனரகத்திற்கு சவால் விடுத்து பேசியுள்ளார். தான் குற்றவாளி என்று உறுதியாகத் தெரிந்தால், ஏன் விசாரிக்க வேண்டும், நேரடியாக வந்து கைது செய்யலாமே என்று வெளிப்படையாக கூறினார். அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதனை கூறினார்.
கட்சி தொண்டர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், பாஜகவை எதிர்க்கும் அனைவரையும் ஒடுக்க அரசியல் சாசன அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி, பழங்குடியினத்தில் இருந்து வந்த முதலமைச்சரான தன்னை அவமதிக்கும் முயற்சி நடப்பதாகவும், இதில் பெரிய அரசியல் சதி இருப்பதாகவும் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டினார்.
Tags :