பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை
ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி சாலையில் பாலாஜி (24) என்பவர் மது அருந்திக்கொண்டிருந்தார். இவர் ஒரு பெயிண்டர். இவருடன் மது அருந்தியவர் ஊரப்பாக்கத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி நந்தகோபால் (22). மது அருந்தும் போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பாலாஜியை நந்தகோபால் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். சம்பவம் அறிந்து இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் தப்பி ஓடிய நந்தகோபாலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags :