மருந்துவுடன் வெற்றிலை போட்ட மூதாட்டி பலி
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குதிரைப்பந்திவிளையை சேர்ந்தவர் தங்கபெருமாள் (72). இவரது மனைவி சரஸ்வதி (70). சரஸ்வதிக்கு சர்க்கரை நோய் இருந்து வந்ததாகவும் அதற்காக தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 25ம் தேதி சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டதும் வெற்றிலை போட்டதால் மாத்திரையும் வெற்றிலையும் சேர்ந்து 'பாய்சன்' ஆகி நுரை தள்ளிய நிலையில் சரஸ்வதி மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சரஸ்வதி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது மகன் ஐயப்பன் (43) இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :