கரடி கடித்து மூன்று பேர் படுகாயம்

by Editor / 06-11-2022 11:00:58am
கரடி கடித்து மூன்று பேர் படுகாயம்



தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வனப்பகுதிகளில் இருந்து வன வாழ் உயிரினங்கள் ஊருக்குள் புகுந்து வருகின்றன.இதன் தொடர்ச்சியாக இன்று மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சைலப்பன், நாகேந்திரன், மசாலா வியாபாரி வைகுண்டமணி ஆகிய 3 பேரை அவ்வழியாக வந்த கரடி தாக்கி படுகாயம் - படுகாயம் அடைந்தவர்களை வனத்துறை அதிகாரிகள் மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via