சாலையின் குறுக்கே நாய் வந்த விபத்தில் மாணவி பலி காதலன் கைது.

by Editor / 07-11-2022 08:37:34am
 சாலையின் குறுக்கே நாய் வந்த விபத்தில் மாணவி பலி காதலன் கைது.

திருமங்கலம் திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடியைச் சேர்ந்த பூமி ராஜா மகள் மகாலட்சுமி 16 இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார் இவருக்கும் அவனியாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தென்னரசு 20 என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் தென்னரசு கடந்த வெள்ளிக்கிழமை மாணவியுடன் இரு சக்கர வாகனத்தில் டி. கல்லுப்பட்டியில் இருந்த திருமங்கலம் நோக்கிச் சென்றார் ஆலம்பட்டி அருகே வந்த போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலைத்திடுமாறி கீழே விழுந்தனர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகாலட்சுமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை பூமி ராஜா தனது மகளை தென்னரசு கடத்திச் சென்றதாக அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசுவை கைது செய்தனர்.

 

Tags :

Share via