எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

by Admin / 07-11-2022 02:54:35pm
  எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழக  பணிகளுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

தலைமைச்செயலகத்தில்  எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ. 373.22 கோடி செலவில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களையும், ரூ. 91.57 கோடி செலவில் 57 துணை மின் நிலையங்களில் 723 எம்.வி.ஏ அளவிற்கு உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 130.18 கோடி மதிப்பீட்டில் 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

Tags :

Share via