கடலுக்கு செல்ல வேண்டாம்-மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மைய தலைவர் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 11,12ம் தேதிகளில் சென்னை உட்பட வட தமிழகம் மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 11,12 ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு இருப்பதால் 12 ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் கே.பாலசந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
Tags :