நளினி, சிறையில் கல்வி கற்றேன்

by Staff / 13-11-2022 05:25:18pm
 நளினி, சிறையில் கல்வி கற்றேன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான நளினி, சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து முருகனை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தன் சிறை அனுபவங்கள் குறித்து பேசிய அவர், சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். எம்.சி.ஏ பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இதைத்தவிர பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷன், பிசினஸ் ஸ்கில்ஸ் போன்ற படிப்புகளையும் படித்தேன். 7 பேர் விடுதலைக்காக போராடியவர்களை சந்தித்து நன்றி சொல்ல ஆசையாக உள்ளது. தமிழக முதல்வரை சந்திப்பது அவருக்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால் சந்திக்க தயக்கமாக உள்ளது என கூறினார்.

 

Tags :

Share via