சபரிமலை சிறப்பு ரயில்

by Staff / 24-11-2022 04:03:05pm
சபரிமலை சிறப்பு ரயில்

எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு இரயில் தஞ்சை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாக இயங்க உள்ளது.

சபரிமலைக்கு மிக அருகே இருக்கும் புனலூர் இரயில் நிலையம் வழியாக முதன்முறையாக ஒரு சிறப்பு இயக்கப்படவுள்ளது.

சென்னை மாநகர் மற்றும் தமிழக டெல்டா மாவட்ட ஐயப்ப சுவாமிகளுக்கு வசதியாக ஐயப்பன் கோவிலின் மிக அருகாமையில் உள்ள சபரிமலை நுழைவாயிலான "புனலூர் வழியாக" அகல இரயில் பாதை மாற்றத்திற்குப் பிறகு முதன்முறை ஆக இயக்கப்பட உள்ளது. 

இந்த இரயில்  தாம்பரத்திலிருந்து விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் மாநகர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகாசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை  , 
"புனலூர் (சபரிமலை)", கொல்லம், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் (கொச்சி) வரை இயக்கப்பட உள்ளது.

28-நவம்பர்-2022 முதல் 03-நவம்பர்-2023 வரை திங்கள்தோறும் எர்ணாகுளத்திலிருந்தும், செவ்வாய்தோறும் தாம்பரத்திலிருந்தும் ஆறு சேவைகள் இயங்கும்.

இந்த ரயிலில்,
 
இரண்டுக்கு குளிர்சாதன பெட்டி - 1
       ( 2 Tier AC)
மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி - 2
       (3 Tier AC)
படுக்கை வசதி பெட்டிகள் - 7
       (Sleeper Coach)
பொது பெட்டிகள் - 2
       (General coach/Un Reserved Coach)
மாற்று திறனாளிகள் பொது பெட்டிகள் - 2
       (SLRD)
என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன 

இந்தச் சிறப்பு இரயிலுக்கு புனலூர் இரயில் நிலையத்திலிருந்து நேரடியாக கேரள அரசின சிறப்புப்பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டு உள்ளனர்.

பழைய 100 ஆண்டுகள் பாரம்பரிய சபரிமலை இரயில் வழிப்பாதையான செங்கோட்டை-புனலூர்-கொல்லம் இரயில் வழித்தடத்தை பயன்படுத்தி,

"ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்பழா ஆகிய ஐயப்ப திருத்தலங்களுக்கும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி யாத்திரை செல்லலாம்".

 

Tags :

Share via