பிரியாணி சாப்பிட்டவர் உயிர் பிரிந்தது.

by Editor / 27-11-2022 07:28:24am
பிரியாணி சாப்பிட்டவர் உயிர் பிரிந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவரது மகன் அருண்குமார். 24 வயதான இவர் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : பிரியாணி சாப்பிட்டவர்

Share via