அண்ணாமலைக்கு தமிழகத்தில் பாதுகாப்பு உள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிகழ்ச்சிக்கு தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடிக்கு போதுமான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். பாஜக ஆளும் பல்வேறு பகுதிகளில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் அண்ணாமலை போல வெறுப்பு பிரசாரம் செய்பவர்களுக்கு கூட பாதுகாப்பு உள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பளிக்க இந்த அரசுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :