இளைஞர் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள் - தலையை தேடும் போலிசார்

by Editor / 01-12-2022 09:28:14am
 இளைஞர் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள் - தலையை தேடும் போலிசார்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 27 வயதுடைய நபர்  கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை போட்டு விட்டு  தலையை வெட்டி எடுத்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்திவேல் மகன் ராமு 27 வயதான இவர் நேற்று மாலை முதல் மாயமாகியுள்ளார். அக்கம், பக்கத்தில் அவரை தேடியும் கிடைக்காத நிலையில் அதிகாலையில்   அருகில் உள்ள இம்மனேந்தல் கண்மாய் கரையில் அடையாளம் தெரியாத இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டு உடல் மட்டும் கிடைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தேடப்பட்டு வந்த ராமு என்பது தெரியவந்ததையடுத்து அப்பகுதியில் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது தலையை வெட்டி எடுத்து சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via