2 கோடி இன்சூரன்ஸு பணத்துக்கா மனைவியை படுகொலை செய்த கணவர்

by Staff / 02-12-2022 12:17:31pm
2 கோடி இன்சூரன்ஸு பணத்துக்கா மனைவியை படுகொலை செய்த கணவர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஷாலு தேவி (32), பாண்டு ராஜு (36) ஆகியோர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பைக்கில் சமோத் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​எஸ்யூவி மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இது ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் கார் விபத்து என்று போலீசார் கருதி விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், ஷாலுவின் மரணத்திற்குப் பிறகு, அவரது கணவர் மகேஷ் சந்திரா ரூ.1.90 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெறுவார் என்பதை அறிந்த போலீசாருக்கு விபத்து குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

பாண்டு ராஜுவின் நண்பர், மகேஷ், பிரபல கூலிப்படையைச் சேர்ந்த முகேஷ் சிங் ரத்தோரிடம், 10 லட்ச ரூபாய் கொடுத்து, கொலை செய்யக்கூறியுள்ளனர். இதனை போலீசார் கண்டுபிடித்தனர். 5.50 லட்சம் முதல் தவணையாக செலுத்தப்பட்டதாக டிசிபி வந்திதா ராணா தெரிவித்தார். இந்த சதியில் ஈடுபட்ட ராகேஷ் குமார், சோனு சிங் ஆகியோருடன் மகேஷ் சந்திரா, ரத்தோட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via