கணவன் மனைவி பலி
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே வேல கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் முருகேசன்(57). விசைத்தறி உரிமையாளர் இவர் தனது மனைவி சூரியகலாவுடன்(47) கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கொங்கணாபுரத்தில் உள்ள புது பழனி கோயிலுக்காக இருசக்கர வாகனத்தில் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் இருந்து மகுடஞ்சாவடி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது இவர் பின்புறம் வந்த மினி லாரி பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் கணவன், மனைவி இருவருக்கும் பலத்த அடிபட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது போகும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். முருகேசன் சூரியகலாவின் உயிர் இழப்புக்கு வேலகவுண்டம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்களது மூத்த மகன் தமிழ்ச்செல்வனுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது
Tags :