9 கிலோ குட்கா கடத்திய நபர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து கர்நாடகா அரசு பேருந்தில் தமிழகத்திற்கு குட்கா பொருட்கள் கடத்தி கொண்டு வருவதாக, ஈரோடு மாவட்டம் ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆசனூர் போலீசார் ஆசனூர் பேருந்து நிறுத்தத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது, அங்குள்ள கடையில் சந்தேகத்தின் பேரில் கையில் பையுடன் இருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 9 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அந்த நபர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீராம்பாளையம் அக்ரஹாரம் மாமரத்துதுறை பகுதியை சேர்ந்த அல்லாபகஸ் (வயது 38) என்பதும் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அல்லாபகஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :