சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாய் பணி ஓய்வு பெற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி பரேஷ் உபாத்யாய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மூத்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் இன்றுடன் ஓய்வு பெற்றதையடுத்து முதலமைச்சர் வாழ்த்து கடிதம் எழுதினார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் 2021 அக்டோபர் மாதம் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53ஆக குறைந்து, காலி இடங்கள் 22ஆக அதிகரித்துள்ளது
Tags :