கழிப்பறை சென்று பணம் கொடுக்காதவர் கொலை

by Staff / 16-12-2022 11:41:06am
கழிப்பறை சென்று பணம் கொடுக்காதவர் கொலை

மத்திய மும்பையின் தாதர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பொதுக் கழிப்பறை அருகே புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கழிவறையை பயன்படுத்திவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பிய ராகுல் பவார் என்பவரை கழிவறையை குத்தகைக்கு நடத்தி வரும் ஊழியர் விஸ்வஜித் தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால், ராகுல் பவாருக்கும் விஸ்வஜித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பவார் தன்னை கத்தியால் தாக்க முயன்றதாகவும், பின்னர் பவாரை தடுக்க கம்பியால் அடித்தபோது சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் விஸ்வஜித் வாக்குமூலம் அளித்துள்ளார். மாட்டுங்கா பகுதி போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

 

Tags :

Share via