மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்.

by Staff / 16-12-2022 03:57:58pm
மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே எம். மலம்பட்டியைச் சேர்ந்த முனிராஜா என்பவர் அவரது மனைவி கலைவாணியை அரிவாளால் வீட்டில் இருந்தபோது வெட்டி படுகொலை செய்துள்ளார். மகளிர் சுய உதவி குழு மூலம் பெற்ற கடன் தொகையால் இருவருக்கும் பிரச்சனை நேரிட்டு கொலை நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via