சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

by Editor / 28-06-2021 09:01:27am
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

மத்திய சோமாலியாவின் விசில் நகரில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் கார் மூலம் இன்று தற்கொலைப்படை தாக்குதலை நிகழ்த்தினர். இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். பலர் காயமுற்றனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் தரப்பிலும் அதிக சேதம் ஏற்பட்டதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். சோமாலியாவில் அல்-ஷபாப் இயக்கத்திற்கு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via