பெண் வழக்கறிஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற கணவன்

by Editor / 18-12-2022 09:16:41am
பெண் வழக்கறிஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற கணவன்

கேரள மாநிலம் கொட்டார கரையருவி நடுவத்தூர் பகுதியைச் சேர்ந்த அகில் ராஜ் ஐஸ்வர்யா ஆகியோருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது பெண் வழக்கறிஞரான ஐஸ்வர்யாவுக்கும் அகில் ராஜுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனித்தனியே வசித்து வருகின்றனர் இவர்களுக்கிடையே விவாகரத்து தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்த அகில் ராஜ் தாமரை சேரி பகுதியில் ஐஸ்வர்யா தனது வாகனத்தை நிறுத்திய போது அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார் இதனால் ஐஸ்வர்யாவின் உடலில் தீ பிடிக்கவே நடுரோட்டில் உருண்டு தீயை அணைக்க முயற்சித்தார் அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உதவியோடு காயமடைந்த ஐஸ்வர்யாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நாள் 30 சதவீத தீக்காயங்களுடன் ஐஸ்வர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அகில் ராஜை கைது செய்தனர்

 

Tags :

Share via