வாலிபர் தற்கொலை

by Staff / 19-12-2022 12:31:48pm
 வாலிபர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே வடக்கன்பாகத்தை சேர்ந்தவர் நாராயணன்(58). இவரது மகன் ஜெனிஷ் (23). இவர் டிப்ளமோ படித்துவிட்டு கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட ஜெனிஷ் வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். கடந்த 13 ம் தேதி நாராயணன் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஜெனிஷ் தனியாக இருந்தார். நாராயணன் திரும்பி வரும்போது ஜெனிஷ் எலி மருந்து தின்று மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெனிஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via