தனியார் பஸ் கார் மோதி விபத்து மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.

by Editor / 20-12-2022 08:16:40am
தனியார் பஸ் கார் மோதி விபத்து மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரி அருகே இருக்கும் மேம்பாலத்தில் நேற்று மாலை தனியார் பஸ்- காரும் மோதி கொண்டதில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கீர்த்திக், செந்தில்குமார், அஜய் ஆகியோர் உயிரிழந்தனர்.அருண்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார்.இதனால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
 

 

Tags :

Share via