தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff / 20-12-2022 05:17:28pm
 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் டாஸ்மார்க் கிடங்கில் சுமைதூக்கும் பணி செய்ய தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மார்க் கிடங்கும் முன்பு தமிழ்நாடு சுமை பணி தொழிலாளர்கள் மற்றும் சிஐடியுடாஸ்மார்க் குடோன் சுமை பணி தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் விநாயகம் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் லிக்கர் பெட்டிக்கு 5: 50 பைசாவிலிருந்து 8 ரூபாய்க்கும்,பீர் பெட்டிக்கு 4-ரூபாய் இருந்து 8-ரூபாய் ஆகவும், வெளிநாட்டு மதுபான பெட்டிக்கு ரூ. 50 இலிருந்து 60 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

 

Tags :

Share via