அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீசார் விசாரணை

by Staff / 27-12-2022 02:07:14pm
 அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீசார் விசாரணை

பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பெருந்துறை புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் முன்பாக சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக விஏஓ சந்தோசுக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை பற்றி இறந்து போன நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via