முன்னாள் அமைச்சரின் மகனுக்கு தூக்கு
பஞ்சாப் முன்னாள் அமைச்சர் அஜ்மல் சீமாவின் மகன் அகமது பிலால் சீமா, 2008ல் சியோல்கோட்டில் உள்ள தனது அவுட்ஹவுஸில் மூன்று ஹிஜ்ராக்களை விருந்துக்கு அழைத்தார். ஆனால் பார்ட்டியில் அவரும் அவரது நண்பர்களும் சொன்னபடி செய்ய அவர்கள் மறுத்ததால், அவர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சியோல்கோட் மாவட்ட அமர்வு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
Tags :