காவலர்களோடு கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய கண்காணிப்பாளர்.

by Editor / 01-01-2023 02:05:33pm
காவலர்களோடு கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய கண்காணிப்பாளர்.

 தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருஸ் பர்னாந்து சிக்னல் சந்திப்பில் 
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் இன்று 01.01.2023 புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.இந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர். அய்யப்பன், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம்,  போக்குவரத்து பிரிவு  காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் முருகப்பெருமாள், வெங்கடேஷ்,நாகராஜன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via