நடுக்கடலில் கவிழ்ந்த படகு
லெபனானில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகளின் படகு ஒன்று சனிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. விபத்தின் போது படகில் 234 பேர் இருந்தனர். தலைநகர் பெரட்டின் வடக்கே கடலில் இந்த விபத்து நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் உடனடியாக லெபனானில் உள்ள ஐ.நா.வின் இடைக்காலப் படையும் கடற்படையும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 232 பேர் காப்பாற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.. இருவர் உயிரிழந்தனர். படகு அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டதால் கவிழ்ந்தது தெரிய வந்தது.
Tags :