3 பேர் சுட்டுக்கொலை: அத்துமீறிய தீவிரவாதிகள்

by Staff / 02-01-2023 11:10:38am
3 பேர் சுட்டுக்கொலை: அத்துமீறிய தீவிரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டாங்ரி கிராமத்தில் 3 வீடுகளுக்குள் புகுந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் பொதுமக்கள் 3 பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் தெரிவித்தார். இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களில் மாவட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது இது இரண்டாவது தடவையாகும்.

 

Tags :

Share via