மகளை இரண்டாவது கணவருக்கு திருமணம் செய்த தாய்

by Staff / 14-07-2023 01:26:06pm
மகளை இரண்டாவது கணவருக்கு திருமணம் செய்த தாய்

ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெண் ஒருவர் கணவர் இறந்த பிறகு, சதீஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ளனர். சதீஷ் தனக்கு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுத்தர கேட்டதனால் அந்த பெண் அவரின் 17 வயது மகளை இரண்டாவது கணவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. சமீபகாலமாக இரண்டாவது கணவரின் தொல்லைகள் அதிகரித்ததால், அந்த இளம்பெண் தாய் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

 

Tags :

Share via