கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி

by Staff / 14-07-2023 01:29:03pm
கணவனை கல்லால் அடித்து கொன்ற மனைவி

கணவன் மனைவியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலம் அம்பேத்கரின் கோனசீமா மாவட்டத்தில் நடந்துள்ளது. ஐனவில்லிலங்கா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா (வயது 34) என்பவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி சத்தியநாராயணியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மனைவி, பெரிய கல்லால் கணவரின் தலையில் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்

 

Tags :

Share via