கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்
அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இது நாடு முழுவதும் சிக்கன நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என கருதப்படுகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆற்றல் சேமிப்பு நடவடிக்கைகளால், சந்தைகள் இரவு 8.30 மணிக்கும், விழா அரங்குகள் காலை 10 மணிக்கும் மூடப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்துள்ளார்.மேலும், பிப்ரவரி முதல் மின்விளக்குகள் தயாரிப்பதும், ஜூலை மாதம் முதல் தரமற்ற மின்விசிறிகள் தயாரிப்பதும் நிறுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது. அரசு அலுவலகங்களில் 30 சதவீத மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எரிசக்தி சேமிப்பு திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
Tags :