நடுங்கும் வட இந்தியா
அடர்ந்த மூடுபனி, பனி மற்றும் கடுமையான குளிர் காற்று ஆகியவற்றால் வட மாநிலங்கள் நடுங்குகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.9 டிகிரி பதிவாகியுள்ளது. பனிமூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை 88 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 335 ரயில்கள் மற்றும் 20 விமானங்கள் தாமதமாக வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உறைபனி காரணமாக, மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டெல்லி உள்ளிட்ட சில வடக்குப் பகுதிகளுக்கு ஐஎம்டி 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :