தீ விபத்தில் எரிந்த குடிசை.
பெருந்துறையை அடுத்துள்ள திங்களூர், ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சென்னி நாயக்கர் என்பவர் மகன் நடராஜன் (60). இவர் தனது மனைவியுடன் அந்தப் பகுதியில் தகர சீட் போட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை இவரது மனைவி சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். எனினும் வீட்டுக்குள் இருந்த தட்டு முட்டு சாமான்கள் அனைத்தும் எரிந்து போனது.
Tags :