ஒரு கோடி ரூபாய்க்கு நாட்டு மாடுகள் விற்பனை

by Staff / 14-01-2023 03:57:15pm
 ஒரு கோடி ரூபாய்க்கு  நாட்டு மாடுகள் விற்பனை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையானது.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நாட்டு மாடுகள் 54 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஜெர்சி ரக மாடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரையிலும் எருமை மாடுகள் 42, 000 விற்பனை செய்யப்பட்டது.சுமார் 4000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டுவரப்பட்டு ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதென வியாபாரிகள் கூறினர்

 

Tags :

Share via