ரயில் மோதி முதியவர் பலி

by Staff / 20-01-2023 03:40:01pm
ரயில் மோதி முதியவர் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி- கொடரோடு இடையே நேற்று காலை 9 மணி அளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த முதியவர் அவ்வழியாக வந்த ஏதோ ரயில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ரயில்வே போலீஸ் எஸ்ஐ ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் எந்த ஊர் என விசாரித்து வருகிறனர்.

 

Tags :

Share via