இறைச்சி கழிவுகளை பட்டப்பகலில் கொட்டி செல்லும் அவலம்

by Staff / 21-01-2023 02:09:07pm
 இறைச்சி கழிவுகளை பட்டப்பகலில் கொட்டி செல்லும் அவலம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை மற்றும் பெரிய பேட்டை கிளை பாலாற்றில் இறைச்சிகளின் கழிவுகளை பட்டப் பகலில் கொட்டி செல்கின்றனர். இப்பகுதியில் 1000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செல்லும் பாதை மற்றும் 3 மேல்நிலை பள்ளிக்கூடங்கள் உள்ள நிலையில் பள்ளி மாண மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து நகராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Tags :

Share via