அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற விவகாரம் 3பேர் இடமாற்றம்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் நுழைவு சீட்டு பெற ரூ.100 லஞ்சம் வாங்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதையடுத்து லஞ்சம் பெற்ற தற்காலிக பெண் ஊழியரை மாவட்ட சுகாதாரத்துறை (நலப்பணிகள்) துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன் 'சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி இந்த லஞ்ச பணத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை விசாரணை நடத்தியதன் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர்கள் மாரியப்பன், இசக்கியம்மாள், சாமிதுரை ஆகிய மூவரையும் வெவ்வேறு அரசு மருத்துவமனைக்கு பணியிடம் மாற்றம் செய்து சுகாதாரத்துறை (நலப்பணிகள்) துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன்உத்திரவிட்டுள்ளார்.
Tags :