பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிக்கான தீபம் ஏற்றம்

by Staff / 17-04-2024 12:17:38pm
பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டிக்கான தீபம் ஏற்றம்

33 வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பியாவில் நேற்று (ஏப்.17) நடைபெற்றது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டிக்கான 'கவுண்டவுன்' தொடங்குவதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via