பாலியல் வழக்கில் விசாரணையில் இருந்த முன்னாள் இன்ஸ்பெக்டர் மரணம்

by Staff / 17-04-2024 12:20:19pm
பாலியல் வழக்கில் விசாரணையில் இருந்த முன்னாள் இன்ஸ்பெக்டர் மரணம்

கேரளாவின் கொச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் சிக்கியுள்ள முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மலையின்கீழ் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஏ.வி.சைஜு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அம்பேத்கர் ஸ்டேடியம் அருகே உள்ள மரத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ய இருந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

 

Tags :

Share via