மருத்துவரின் மகள் கூட்டு பலாத்காரம்

by Staff / 06-03-2023 03:19:13pm
மருத்துவரின் மகள் கூட்டு பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவரின் மகள் அவரது நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்ரா பகுதியை சேர்ந்த மருத்துவரின் மகள் இன்ஸ்டாகிராம் மூலம் வினய் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், ஹூக்கா பார்லருக்கு வருமாறு அழைத்த அவர், இளம்பெண்ணுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார். அவர் சுயநினைவை இழந்ததும், ஒரு வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via