செல்பி மோகத்தால் மேட்டூர்அணையில்இருந்து திறக்கப்பட்ட நீரில் சிக்கிய 3 பேர் மீட்பு

by Editor / 16-07-2022 11:02:39pm
செல்பி மோகத்தால் மேட்டூர்அணையில்இருந்து திறக்கப்பட்ட நீரில்  சிக்கிய 3 பேர் மீட்பு

 சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்தேக்கத்திலிருந்து உபரி நீர் போக்கி வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்த நிலையில் விபரீதம் புரியாத அந்தப்பகுதியைசேர்ந்த  மூன்று இளைஞர்கள் செல்பி எடுக்கச் சென்றுள்ளனர்.இந்த நிலையில் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கபட்டதால்  ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். அலைபேசிமூலம் அவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்களது குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கவே அவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.நீண்ட போராட்டத்திற்குபின்னர் 3பேரும் மீட்கப்பட்டனர்.

செல்பி மோகத்தால் மேட்டூர்அணையில்இருந்து திறக்கப்பட்ட நீரில்  சிக்கிய 3 பேர் மீட்பு
 

Tags : 3 people trapped in flood released from Mettur dam rescued

Share via