குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது.
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் கரியாம்பட்டி கிராம சபை கூட்டத்தில், உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டர். இதில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் செயல்படுத்த உள்ளார் என்றார். பின்னர் அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேலும் பிரதம மந்திரி நீர்பாசன திட்டத்தின் கீழ் தையல் எந்திரம், விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Tags :