பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி கல்லூரி மாணவர்கள்

by Staff / 27-01-2023 05:03:15pm
பஸ்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி கல்லூரி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி தொடங்கும் நேரங்களில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டு தொங்கியபடி செல்கின்றனர். அதிவேகமாக வாகனங்கள் செல்வதால், மாணவர்கள் தவறி விழுந்து காயம் அடைவது மட்டுமில்லாமல் உயிர் பலியும் ஏற்படுகிறது.இந்த ஆபத்து உணராமல் டிரைவர்களும் அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர்.மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் அய்யம்பாளையம் உசிலம்பட்டி செல்லக்கூடிய பேருந்தில் மாணவர் மற்றும் முதியோர்கள் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனை கண்டு கொள்ளாமல் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் அதிவேகமாக பேருந்தை இயக்குகின்றனர். இந்த நிலை மாவட்டம் முழுவதும் உள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via