21 மீனவர்கள் கைது: நிரந்தர தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனியும் தாமதிக்காமல் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
Tags :