ரயில்வே அதிகாரியை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff / 29-01-2023 04:41:49pm
ரயில்வே அதிகாரியை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் உள்ள பகுதி மூத்த பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்ப்பவர் ரமேஷ், இவர் தனக்கு கீழ் பணி புரியும் பொறியாளர் பிரிவு அலுவலக ரயில்வே ஊழியர்களை தரக்குறைவாகவும் ஒருமையில் பேசி வருவதாகவும் மேலும் அடிமை போல நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எஸ் ஆர் எம் யு ரயில்வே சங்கம் சார்பில் தூத்துக்குடியில் உள்ள பகுதி மூத்த பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளநிலை பொறியாளர் மீது ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ரயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர்

 

Tags :

Share via