நிலநடுக்கத்தில் உயிரை இழந்த, காயமுற்ற மக்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 07-02-2023 08:20:26am
நிலநடுக்கத்தில் உயிரை இழந்த, காயமுற்ற மக்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிலநடுக்கத்தில் உயிரை இழந்த, காயமுற்ற மக்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


துருக்கி நாட்டிலும் சிரியாவிலும் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மட்டும் மொத்தம் 2300 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் பலி எண்ணிக்கை 1500 ஆக உள்ளது. சிரியாவில் பலி எண்ணிக்கை 800 ஆக உள்ளது. இந்நிலையில் அதிதீவிரமான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க்.ஸ்டாலின் தனது டிவிட்டர்ப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..

”துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் மிகவும்  வருத்தமளிக்கிறது. இந்த பேரழிவில் பெரிய அளவில்  பாதிக்கப்பட்டு உயிரை இழந்த, காயமுற்ற மக்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இந்த துயரமான நேரத்தில் இரண்டு நாட்டு மக்களையும் நினைத்து எனது இதயம் வேதனைக்குள்ளானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்.” என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via