ரோஜாவின் செருப்பை கையில் எடுத்த ஊழியர்

by Staff / 10-02-2023 05:01:04pm
ரோஜாவின் செருப்பை கையில் எடுத்த ஊழியர்

 ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சாராக இருப்பவர் ரோஜா. நகரி தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றிபெற்ற இவர், ஜெகன்மோகன் ரெட்டி அரசில், அமைச்சராக இருக்கிறார். தற்போது அம்மாநிலத்தில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு நேற்று ரோஜா அதிகாரிகளுடன் சென்றிருந்தார். அங்கு, ரோஜா கடலில் இறங்கி சிறிது நேரம் செலவிட்டு மகிழ்ந்தார். கடல் நீரில் இறங்கும் முன் அவரது செருப்பை கடற்கரையோரம் கழற்றிவிட்டார். உடனே அங்கிருந்த அரசு ஊழியர் ரோஜாவின் செருப்பை கையில் எடுத்துக்கொண்டார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via